BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Slider

latest

Slider Right

randomposts6

District News

District News/block-5

Colachel Area News

Colachel News/block-4

Nagercoil Area News

Nagercoil News/block-1

Marthandam Area News

Marthandam News/block-3

Kerala News

Kerala News/block-8

State News

State News/block-9

National News

National News/block-2

World News

World News/block-2

Sports News

Sports News/block-5

Islamic News

Islamic News/block-7

Economic News

Economic News/block-6

Motor News

Motor News/block-6

Cinema News

Cinema News/block-5

Religious News

Religious News/block-3

Child Care

Child Care/block-2

Beauty Tips

Beauty Tips/block-2

Recipes

Recipes/block-5

Medical Tips

Medical News

Latest Articles

விவசாய மசோதாக்கள் சாதக, பாதகங்களை விளக்கும் விவசாயிகள்

விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதா, விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா, அத்தியாவசிய பொருள் திருத்தசட்ட மசோதா… இந்த மூன்று மசோதாக்களும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டன.
ராஜ்யசபாவில் அத்தியாவசிய பொருள் திருத்தசட்ட மசோதா தவிர மற்ற இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம், நஷ்டம் குறித்து விவசாய சங்கத்தினரிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது: 

விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா பற்றி முதலில் சொல்ல வேண்டும். ஏற்கனவே இருந்த சட்டத்தில் ஒரு மாநிலத்தில் விளையும் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது பிற மாநிலத்திற்கு அனுப்ப தடை இருந்தது. 

உதாரணமாக மதுரையில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு இருக்கும் போது இங்கிருந்து பிறமாநிலங்களுக்கு விவசாயிகள்அனுப்ப முடியாது. அதற்கு மாநில அரசு அனுமதி தராது. புதிய மசோதாவில் அந்த தடையில்லை. இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் விவசாயிகள் செல்லமுடியும். எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு சென்று விற்க முடியும். இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் மாநில அரசு தடை விதிக்க முடியாது. 

உதாரணமாக மதுரையில்ஒரு தேங்காய் ரூ.12க்குவிற்கிறோம். இதுவே டெல்லி ஆசாத் மார்க்கெட்டில் ரூ.45க்கு விற்கப்படுகிறது என்றால் மதுரை விவசாயி டெல்லிக்கு சென்று தேங்காய்களை விற்று லாபம் பார்க்கலாம். இதை வரவேற்கிறோம். விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதாவைப் பற்றி சொல்வதென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களோடு விவசாயிகள் ஒப்பந்தம் செய்து விவசாயம் செய்தால் லாபம் கிடைக்கும் தான். பயிர் சாகுபடிக்கு முன்பே இவ்வளவு தான் விலை என இரு தரப்பும் ஒப்பந்தம் போடுவர். இது சாதகமான அம்சமாக தெரிந்தாலும் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு மேலே தான் வாங்க வேண்டும் என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மங்குஸ்தான், நார்த்தை… ஊடுபயிர் சாகுபடி அசத்தல்!

பழங்களின் அரசியான மங்குஸ்தான், ஜாதிக்காய் சாகுபடியில் அசத்தி வருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல்.
தென்னை, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதிலும் ஊடுபயிர் மூலமாக வருமானத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். தேக்கு, பப்பாளி, மாட்டுத்தீவனம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையில் ஊடுபயிர் மாறுபடுகிறது. தென்னந்தோப்பில் மைக்ரோ கிளைமேட் உருவான பண்ணைகளில் பாக்கு, மிளகு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்கிறார்கள். அந்த வகையில், தனது தென்னந்தோப்புக்குள் பாக்கு, மிளகு பயிர்களுடன் ஜாதிக்காய், மங்குஸ்தான் பயிர்களையும் சாகுபடி செய்து மகசூல் எடுத்து வருகிறார் திண்டுக்கல் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல் மொகைதீன். 

பரம்பரையா விவசாயம்தான் எங்க தொழில். இப்ப என்னோட பசங்களையும் விவசாயத்துல ஈடுபடுத்திட்டு இருக்கேன். எங்கப்பா அப்துல் காதர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஆனாலும், `தான் ஒரு விவசாயி’ங்கிறதைத்தான் பெருமையாகச் சொல்வார். அதனாலதான் என்னையும் விவசாயியா உருவாக்குனாரு. எனக்கு ரெண்டு பசங்க. பெரிய பையன் சாகுல் ஹமீது, டிகிரி முடிச்சிட்டுப் பெட்ரோலியம் கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தாரு. இப்ப அந்த வேலையை விட்டுட்டு, முழு நேர விவசாயியா இருக்கார். சின்ன பையன் முகைதீன் அப்துல் காதர், முதுகலை சமூக சேவை படிப்பு முடிச்சிட்டு, மும்பையில ஒரு கம்பெனியில வேலை பார்த்துட்டு இருக்காரு. அவரும் கூடிய சீக்கிரம் விவசாயத்துக்கு வந்திடுவாரு” – அறிமுகப்படுத்திக் கொண்ட ரசூல், தோப்புக்குள் நடந்துகொண்டே பேசத் தொடங்கினார். 

தோப்பு முழுக்க மரங்கள். வானைத் தொடும் எண்ணத்தில் தன்னை நீட்டிக்கொண்டே போகும் தென்னை, அதற்கு இடைப்பட்ட இடங்களில் பாக்கு. இவை இரண்டும் தோப்புக்குள் அதிக வெயில் படாமல் இதமான சூழலை உருவாக்குகின்றன. ஒரு பக்கம், பலா காய்த்துத்தொங்குகிறது. காப்பி செடி முழுக்க காய்கள், நார்த்தை மரங்கள், செம்மரம், மகோகனி, குமிழ், தேக்கு என மரங்களில் மாநாடு நடப்பது போன்ற காட்சி. இதற்கிடையில் ஜாதிக்காய் மரங்கள், மங்குஸ்தான் மரங்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஜாதிக்காய் மரங்களில் மரம் முழுக்க காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தோப்பு முழுக்க மண்புழுக்களின் எச்சங்கள்.

ஒரே இடத்தில் உளுந்து, வெண்டை, தக்கைப்பூண்டு சாகுபடி சாதனை

மூன்றரை ஏக்கர் நிலத்தில் உளுந்து, வெண்டைக்காய், தக்கைப்பூண்டு என கிணற்று நீரை பயன்படுத்தி அடுத்தடுத்து சாகுபடி செய்து கோடையிலும் விவசாயத்தில் குன்றாத வருமானம் ஈட்டி வருகிறார் மதுரை திருப்பாலையை சேர்ந்த ஆசிரியை பிரசன்னா. இவர் எம்.எஸ்ஸி., (இயற்பியல்) மற்றும் பி.எட்., பட்டங்கள் பெற்று திருப்பாலை நல்லமணி அரசு உயர் நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
மதுரை அருகே வீரபாண்டியில் தனது மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் ஒன்றரை ஏக்கரில் உளுந்து விதைப்பண்ணை, அரை ஏக்கரில் வெண்டைக்காய், ஒன்றரை ஏக்கரில் மண்ணுக்கு வலு சேர்க்கவும், நுண்ணுாட்ட சத்துக்களை அதிகளவு கொடுக்கும் தக்கைப்பூண்டு சாகுபடி செய்து வருகிறார். உளுந்து விதைப்பண்ணை அமைத்து வேளாண்மைத்துறைக்கு சான்றளிக்கப்பட்ட ‘பம்பல் – 6’ ரக உளுந்து விதைகளை வழங்கி வருகிறார். 

முற்றிய வெண்டைக்காய்களை வட்ட வடிவில் நறுக்கி வத்தல், மோர் வத்தல் என மதிப்பூட்டி கூடுதல் விலைக்கு விற்கிறார். வேளாண் விளை பொருட்களில் சிறு சிறு தொழில்நுட்பங்களை புகுத்தி விவசாயத்தில் கூடுதல் வருவாய் ஈட்டி வருகிறார்.

உபரி வருமானம் தரும் ஊடுபயிர்

ஊடுபயிர் என்பது பயிருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக, நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களை தடுக்க, ஈரப்பதம் காக்க, மண் வளத்தை அதிகரிக்க, ஊடுபயிர் சாகுபடி உதவுகிறது. ஊடுபயிரிலிருந்து 40 சதவீதம் வருமானம் கிடைக்க வழி செய்கிறது.
முக்கிய பயிராக ஒரு விதை தாவர பயிர்களான சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுடன் இரு விதை தாவர பயிர்களான பயிறு வகைகள், நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம். ஊடுபயிர், முக்கிய பயிர்களுக்கு பக்கத்துணையாக, பாதுகாப்பு அரணாக இருக்கிறது. 

மானாவாரி, இறவை நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் இலைகள் மூலம் 80 சதவீதம் தங்களுக்கு தேவையான உணவு உற்பத்தியை சூரிய ஒளி மூலம் எடுத்து கொள்கின்றன. 

சூரிய ஒளி இலைகளில் அதிகம் பட்டால் ஸ்டார்ச் உற்பத்தி குறைவாகிறது. சூரிய ஒளி ஒரு இலையில் படும் அளவை பொறுத்து உணவு உற்பத்தி கூடவோ, குறையவோ வாய்ப்புள்ளது. ஒரு வித்து தாவரத்திற்கு அதிக சூரிய ஒளி தேவைப்படுகிறது. 

ஒரு பயிரை மட்டும் உற்பத்தி செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியாது. எனவே, ஒரு மடங்கு நிலம், இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் என்ற விகிதத்தில் ஒரு நிலத்தில் முக்கிய பயிர், ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் என்று சாகுபடி செய்தால் அதிகளவவில் லாபம் பெற முடியும். 

ஊடு பயிர்களால் முக்கிய பயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. முக்கிய பயிருக்கு வரும் இடையூறுகளை (நோய்கள், பூச்சிகள்) தடுக்க பயன்படுகிறது. அதேநேரத்தில் குறைந்த இடத்தில் அதிக வருமானம் தருகிறது. அதன் இலை, தழைகள், கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது. மேலும் நிலத்தின் மண் வளத்தை பேணி தழைச்சத்து, தன் வேர் முடிச்சுகளின் மூலம் கிரகித்து மண்ணை வளப்படுத்துகிறது. 

ஒவ்வொரு முக்கிய பயிருக்கும், ஒவ்வொரு விதமான ஊடுபயிர் சாகுபடி செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக பருத்தியில் ஊடுபயிராக உளுந்து, பாசி, தட்டை, வெண்டை, கொத்தவரை சாகுபடி செய்யலாம். 

வரப்பு பயிராக சூரியகாந்தி, செண்டு மல்லி சாகுபடி செய்யலாம். பருத்திக்கு முழுப்பயிர் பாதுகாப்பு அரணாக இவை இருக்கிறது. நிலக்கடலையில், துவரை, உளுந்து போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். 

சூரியகாந்தி வயலை சுற்றி சோளம், கம்பு போன்றவற்றை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். 

தென்னையில் ஊடுபயிராக சணப்பு, கொழுஞ்சி, கொக்கோ சாகுபடி செய்தால் அவை நிலத்திற்கு உரமாவதுடன் அதன் விதைகளை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்.

கோடை உழவு செய்தால் இயற்கை வளம் பெருக்கலாம்

கோடை உழவு செய்தால், நிலத்தில், இயற்கை வளங்களை மேம்படுத்தலாம்.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சிலர், அதிகமாக நெல் பயிரை பயிரிடுகின்றனர்.
கோடை காலங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், நெல் சாகுபடி செய்வதை சிலர் நிறுத்திவிடுவர். 

அவ்வாறு செய்யும் விவசாயிகள், தங்களின் நிலங்களை தரிசாக போடாமல், கோடை உழவு – புழுதி ஓட்டுதல் செய்து வைத்தால், நிலத்தில் இருக்கும் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கு உதவும் என, வேளாண் வல்லுனர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து, காஞ்சிபுரம் வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர், சோமு கூறியதாவது: 

தரிசு நிலத்தை, கோடை உழவு செய்வதால், மண்ணில் புதைந்து இருக்கும் கூட்டு புழுக்களை அழிக்கலாம். வயலில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கலாம்.

மழை நீர் பிற வயலுக்கு செல்லாமல், ஈரப்பதத்தை தக்கவைக்கும். புல் வளர்வதை கட்டுப்படுத்தலாம் . 

இவ்வாறு, அவர் கூறினார்.

25 ஏக்கர் தோப்பு, 17 வருட உழைப்பு… பெண் விவசாயி பேச்சியம்மா

தன் கணவருடைய நினைவுகள் நிறைந்த தோப்பு. அந்த நினைவுகள் தரும் உத்வேகத்தால் தினமும் பல கி.மீ கடந்து இங்கே வந்து பரிவோடு தோப்பைப் பராமரிக்கிறார். அந்த வறண்ட பூமியில், விளைச்சலோடு போதுமான வரைக்கும் மல்லுக்கட்டுகிறார். தோப்புக்கான பொருள்செலவை தனது பெருங்கொண்ட உழைப்பால் ஈடுசெய்கிறார் மதுரையைச் சேர்ந்த பெண் விவசாயி பேச்சியம்மா!
மதுரை நகரிலுள்ள தன் வீட்டிலிருந்து பஸ் ஏறி, நகரத்துக்கு வெளியே 30 கி.மீ தூரம் பயணித்து, செக்கானூரணி தாண்டி கிராமத்துப் பக்கம் குறுகலான ஒற்றையடி தார்ச்சாலையில் பஸ்ஸைவிட்டு இறங்கி, ஊருக்குள் நடக்கத்தொடங்குகிறார். ஒரு மேடேறி, நிழலேதுமற்ற வெட்டவெளியில் மூச்சிரைக்கக் கால்கள் நடக்க, அந்த இரண்டு மணிநேரத்தையும் கடந்துவந்த அசதியைப் போக்க, ஒரு மாமர நிழல் கயிற்றுக் கட்டிலில் ஓய்வாய் அமர்கிறார் பேச்சியம்மா. பின்னணியில் தெரிகின்ற பலநூறு வானுயர்ந்த தென்னைகள், இவருக்கு உரிமையானவை. விளைச்சல் தருகின்ற தனது 25 ஏக்கர் சொந்த பூமியைக் கணவர் இல்லாமல் நிர்வகிக்கிறார் பேச்சியம்மா. 

செக்கானூரணி அருகே பூச்சம்பட்டி சமத்துவபுரத்தில் உள்ளது தங்கச்சாமி தோப்பு. கலைஞர் தொடங்கிவைத்த சமத்துவபுரத்தைவிட மூத்தது, இந்தத் தோப்பு. இங்கே தனக்குச் சொந்தமாய் உள்ள விளைநில எல்லைகளைக் கைகாட்டுகிறார் பேச்சியம்மா. கண்மாய்ப்பகுதியில் 1,100 தென்னைகள், மேட்டுப் பகுதியில் தேக்கு, மா, முருங்கை மரங்கள் எனப் பார்க்கும் இடமெல்லாம் பசுமை. வயல் பகுதிகளில் கத்திரி, வெண்டை உள்ளிட்ட செடிகள் காய் விட்டிருக்கின்றன. 

“எனக்கு ரெண்டு மகனுங்க, ஒரு பொண்ணு. பொண்ணு பொறந்தப்போ வீட்டுக்காரரு வாங்கிப் போட்டதுப்பா இந்த இடம். அவருக்கு தோட்டம்னா அவ்ளோ உசுரு. ஒவ்வொரு செடியையும் கண்ணும் கருத்துமா வளர்த்தாரு. பெத்த புள்ள மாதிரி பார்த்துகிட்டார். பொண்ணுக்கு 8 வயசிருக்கும்போது அவரு தவறிட்டாரு. அதுக்கப்புறம் அவரோட உழைப்பை நான் தூக்கி சுமக்க ஆரம்பிச்சேன். இந்த இடம்தான் அவரோட உசுரு, மனசு தங்கின இடம். 
எப்ப தோப்புக்கு வந்தாலும் அவர் பக்கத்துல உட்கார்ந்த மாதிரி மனசுக்கு இதமா இருக்கு. அவர் போனதுக்கு அப்புறமா இதோ ஓடியே போச்சு வருஷம்… 17 வருஷமாச்சு. வீடு, நெலம், தோப்பு, பிள்ளைங்க எல்லாத்தையும் நான்தான் பாத்துக்கிறேன்” என்பவரது வார்த்தைகளில் பிசிரு ஏதுமற்ற உறுதி. சமத்துவபுரத்தில் உள்ளவர்கள் சிலர் இவர் தோப்பில் கூலிவேலை செய்கின்றனர். 

காய்கறிச் செடிகளில் களையெடுப்பது, காய் பிடுங்குவது எல்லாமே இங்கு வரும் பெண் கூலியாள்களின் தினசரி பணி. மா, தென்னை மரம் ஏற ஆள்கள் வெளியிலிருந்து வருகிறார்கள். உள்ளூர்க்காரரான நீலமேகம், மொத்த தோப்புக்கும் மேற்பார்வை பொறுப்பை பார்க்கிறார். அவருக்குச் சமத்துவபுரத்தில் வீடு. 

“பூராவும் செவலை மண்ணுங்கிறதால இங்க எல்லாமே விளையும். ஆனா, தண்ணி பஞ்சம்தான் எங்க பிழைப்பைக் கெடுக்குது” – நீலமேகம் சொல்ல, “இந்த கண்மாய் செழிப்பா இருந்துச்சுன்னா, ரெண்டு கெணத்துலயும் ஊத்து தங்கும். இப்ப போர் போட்டுத்தான் தண்ணி பாய்ச்சணும்னு ஆயிடுச்சு” என வருத்தப்படுகிறார் பேச்சியம்மா. ”தக்காளிக்கு எட்டு நாளைக்கொருமுறை, வெண்டைக்கு மூணு நாளைக்கொருமுறை, கத்திரிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள்னு தண்ணி பாய்ச்சணும்” என்று பேச்சியம்மா சொல்ல, நாம் சென்றிருந்தபோது கூலியாள்கள் நல்ல கத்திரியைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். ஒன்றரை மூட்டைத் தேறியது. சமஅளவு சொத்தைக் காய்களும் மிஞ்சிவிட்டன. பரவை மார்க்கெட்டுக்குக் கத்திரிகளை மூட்டைக் கட்டினார் நீலமேகம். “கூலி, வண்டிக்கெல்லாம் போக 200 ரூபா கைக்கு இருக்கும்” என்றபடியே கத்திரிச்செடிகளை காட்டினார் பேச்சியம்மா. 

விதைத்து செடிகள் முளைத்ததும், அவற்றை அறுத்து வேறிடத்துக்கு மாற்றி நட வேண்டும். கத்திரிக்காய் வளர்ப்புப் பக்குவம் அது. வெண்டைச் செடிகளில் காய்களைப் பறிப்பது அவ்வளவு எளிதல்ல. வீரியமான செடிகள் அவை. கைகள் தீயாய் எரியும். ஆனாலும் அனாயசமாக வெண்டைகளைப் பறிக்கிறார் பேச்சி. கழித்துப்போட்ட கத்திரிகள் தோப்பு மாடுகள் நான்குக்குப் பகிரப்பட்டன. தோப்புக்குக் காவலன், வாயில்லா ஜீவன் மணி. ஓட்டம் பிடித்த மாட்டைக் கூட்டிவரச்சொன்னால், விரட்டிச் சென்று மாட்டுக்கயிற்றை வாயில் கவ்வி வலுகொடுத்து இழுத்து நிறுத்திவிடுவானாம் அந்த நாலு கால் கெட்டிக்காரன். யாரும், எதுவும் இவனை மீறி தோப்பை நெருங்க முடிவதே இல்லை. அவன் குரைக்கின்ற சத்தம் அடுத்த தோப்பைச் சென்றடைகிறது. 

Thanks to https://gttaagri.relier.in/