BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

விவசாய மசோதாக்கள் சாதக, பாதகங்களை விளக்கும் விவசாயிகள்

விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதா, விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா, அத்தியாவசிய பொருள் திருத்தசட்ட மசோதா… இந்த மூன்று மசோதாக்களும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டன.
ராஜ்யசபாவில் அத்தியாவசிய பொருள் திருத்தசட்ட மசோதா தவிர மற்ற இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம், நஷ்டம் குறித்து விவசாய சங்கத்தினரிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது: 

விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா பற்றி முதலில் சொல்ல வேண்டும். ஏற்கனவே இருந்த சட்டத்தில் ஒரு மாநிலத்தில் விளையும் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது பிற மாநிலத்திற்கு அனுப்ப தடை இருந்தது. 

உதாரணமாக மதுரையில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு இருக்கும் போது இங்கிருந்து பிறமாநிலங்களுக்கு விவசாயிகள்அனுப்ப முடியாது. அதற்கு மாநில அரசு அனுமதி தராது. புதிய மசோதாவில் அந்த தடையில்லை. இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் விவசாயிகள் செல்லமுடியும். எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு சென்று விற்க முடியும். இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் மாநில அரசு தடை விதிக்க முடியாது. 

உதாரணமாக மதுரையில்ஒரு தேங்காய் ரூ.12க்குவிற்கிறோம். இதுவே டெல்லி ஆசாத் மார்க்கெட்டில் ரூ.45க்கு விற்கப்படுகிறது என்றால் மதுரை விவசாயி டெல்லிக்கு சென்று தேங்காய்களை விற்று லாபம் பார்க்கலாம். இதை வரவேற்கிறோம். விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதாவைப் பற்றி சொல்வதென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களோடு விவசாயிகள் ஒப்பந்தம் செய்து விவசாயம் செய்தால் லாபம் கிடைக்கும் தான். பயிர் சாகுபடிக்கு முன்பே இவ்வளவு தான் விலை என இரு தரப்பும் ஒப்பந்தம் போடுவர். இது சாதகமான அம்சமாக தெரிந்தாலும் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு மேலே தான் வாங்க வேண்டும் என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
NEXT »

No comments