BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Child Care. Show all posts
Showing posts with label Child Care. Show all posts

குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பற்றி புரிய வைப்பது எப்படி?

இப்போதைய நெருக்கடியில் பள்ளிகள் மூடப்பட்டு, நம்முடைய அன்றாட நடைமுறை மாறிவிட்டது. இது அப்படியே தொடரும் என்று இருந்துவிட முடியாது. கொரோனா வைரஸ் பற்றி குழந்தைகளுக்கு எளிதாக புரிய வையுங்கள் என்கிறார் கிக்கோ அப்ஸர்வேட்டரி சென்டருடன் இணைந்து வழங்குகிறார் ஆர்ட்ஸானா இந்தியாவின் சீ.இ.ஓ ராஜேஷ் வோஹ்ரா.
விதி 1: வைரஸ் பற்றிய பதட்டத்தை காட்டிக் கொடுக்கும் வகையில் பேசவோ செயல்படவோ வேண்டாம். குழந்தைகளுடன் பேசும்போது, ​​அமைதியாகவும், ஒழுக்கமாகவும் இருங்கள், பலர் நோய்வாய்ப்படுகிறார்கள் ஏன் தெரியுமா? என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லவேண்டும். இந்த நோயிக்கு தீர்வு காண பல மருத்துவமனைகள் மற்றும் வல்லுநர்கள் இருப்பதாக உங்கள் பிள்ளைக்கு உறுதியளிக்க வேண்டும். அதே நேரத்தில், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சமநிலையைப் பேணுங்கள். பெரியவர்களை விட குழந்தைகள் குறைவாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புரிய வையுங்கள். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இருமல் மற்றும் மூக்கு ஓழுகுதல் மட்டுமே இருக்கும். இளையவர்களுக்கு திறமையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் சரி செய்து விடலாம் என்று சொல்லுங்கள்

கொரோனா வைரஸ் பற்றி எப்போது அணுக வேண்டும்?

இரவு நேரம் எப்போதும் பயமாக இருப்பதால், காலையில் இந்தச் செய்தியைப் பற்றி விவாதிப்பது நல்லது. காலையில் எடுத்துச் சொல்வதன் கூடுதல் நன்மை என்னவென்றால், குழந்தைகள் நினைப்பதை செயலாக்குவதற்கும் கேள்விகளைக் கேட்பதற்கும் நாள் முழுவதும் உள்ளது.

உங்கள் பிள்ளைக்கு நன்கு தெரிந்த சான்றுகளைப் பயன்படுத்தவும்
குழந்தைகள் ஏற்கனவே அனுபவித்த பருவகால காய்ச்சல் பற்றி விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும். சளி, தொண்டை புண் அல்லது காய்ச்சல் இருப்பதன் அர்த்தம் என்னவென்று குழந்தைகளுக்குத் தெரியும், மேலும் சிளிக்ஷிமிஞி-19 மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமும், நெரிசலான பகுதிகளில் தங்குவதன் மூலமும் பரவுகிறது என்பதை எளிதில் புரிந்துகொள்வார்கள். உறுதியாக, இது ஒரு புதிய நிலைமை, ஒரு புதிய வைரஸ் என்பதை நீங்கள் மீண்டம் மீண்டும் விளக்க வேண்டும், எனவே மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை என்று பயமுறுத்த வேண்டாம்.(குழந்தைகள் ஏற்கனவே அந்த தடுப்பூசி “சிறப்பு” காட்சிகளை அனுபவித்திருப்பார்கள்). ஒரு தீர்வைக் கண்டறிந்து வைரஸைத் தோற்கடிக்க “சூப்பர் நாயகர்களாக” பணியாற்றும் வல்லுநர்கள் உள்ளனர் என்பதை மட்டும் அவர்களிடம் சொல்ல சொல்ல வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு தினசரி வழக்கத்தை பழக்குங்கள்

நாம் ஏற்கனவே சொன்ன அன்றாட பழக்க வழக்கத்தை முடிந்தவரை சாதாரணமாக வைக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் பள்ளிக்கு போதுமான வயதாக இருந்தால், காலை நேரங்களை வீட்டுப்பாடங்களுக்கு ஒதுக்க வேண்டும், அதே நேரத்தில் பிற்பகலை விளையாட்டுக்கு பயன்படுத்தலாம். வரைதல் அல்லது செய்ய வேண்டிய பாடதிட்டங்கள் முக்கியம் என்று குழந்தைகளுக்கு உறுதியளிக்கவும், உங்கள் சாதாரண அட்டவணையை பராமரிக்கவும், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் இரவு உணவை உட்கொள்ளவும், ஒன்றாக ஒரு படத்தைப் பார்க்கவும், படுக்கைக்கு ஒன்றாக செல்லவும், சரியான நேரத்திற்கு அவர்களை எழுப்பவும். கிடைக்கும் நேரத்தில் உங்கள் மொட்டைமாடி தோட்டத்தைப் பராமரிக்க ஊக்குவிக்கவும், டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான வழிகளைக் கண்டறியவும்.

கவனமாக இருங்கள், பயப்பட தேவையில்லை

கொரோனா வைரஸ் பற்றி பயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதை விளக்குங்கள், ஆனால் கவனமாக இருப்பது மற்றும் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம்
நீங்கள் தும்மல் அல்லது இருமல் வரும் ஒவ்வொரு முறையும் உங்கள் கைகளை நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளை எப்படி கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பதை சொல்லி கொடுங்கள். - ஆன்லைனில் பல குழந்தை நட்பு வீடியோக்கள் உள்ளன - மற்றும் போதுமான பிறந்தநாள் வீடியோக்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க செய்யுங்கள்.

வீட்டிலேயே இருங்கள்:

மற்றொரு முக்கியமான விதி என்னவென்றால், ஏராளமான மக்கள் நோய்வாய்ப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், குறிப்பாக பலவீனமானவர்களைப் பாதுகாப்பதற்காகவும், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது மிகவும் வயதானவர்கள் மற்றும் குணப்படுத்துவதற்கு சிரமமாக இருக்கும். அதனால்தான், இந்த “சிறப்பு” நாட்களில் பள்ளி மூடப்பட்டிருந்தாலும், நாம் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும்.

இறுதியாக, இந்த நெருக்கடியை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவதும், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒன்றாகக் வீட்டில் இருப்பதும் முக்கியம். இதில் உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது தனிமனிதருக்கும். நம் குடும்பத்திற்கும் உதவுகிறது மற்றும் அனைவருக்கும் வலு சேர்க்கவும் மற்றும் பயனளிக்கும் ஒரு நல்ல சுழற்சியை உருவாக்குகிறது.

குழந்தை பராமரிப்பில் தந்தை செய்யும் தவறுகள்!

குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.
முதல் கடமை

குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.

இரண்டாம் கடமை

குழந்தையை குளிப்பாட்டுவது

தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது

பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.

நாப்கின் மாற்றுவது.

குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது

குழந்தையுடன் நேரம் செலவழிப்பது

இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும்.

சில குழந்தைகள் தந்தையிடம் செல்லாது? ஏன்?

குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது என முழுமையாக தாயே குழந்தையை பராமரித்தால், தாயிடம் மட்டுமே குழந்தைக்கு நல்லுறவு இருக்கும். தந்தையை வேறு ஒரு ஆளாக குழந்தை புரிந்து கொள்ளும். தந்தையர்கள் சிலர் விளையாட்டுக்காக குழந்தையை மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதனாலும் குழந்தை தந்தையிடம் செல்லாது. தாயுடன் மட்டுமே நெருக்கம் காண்பிக்கும்.

தந்தை செய்ய வேண்டியவைகள்

குழந்தையுடன் விளையாடுதல்

நல்லது சொல்லிக் கொடுத்தல்

குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது

குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
மரியாதை சொல்லி தருவது

குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது

மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது

குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.

குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.

குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.

நல்ல தரமான கதைகளை சொல்வது

தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும். உணவுகளைப் பற்றி தந்தை குழந்தையிடம் சொல்ல வேண்டியவை
இதை சாப்பிடகூடாது. அதை சாப்பிடகூடாது எனச் சொல்வதைவிட இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என எடுத்து சொல்ல வேண்டும். தனக்கு கீரை பிடிக்கவில்லை என்றால் குழந்தைக்கும் அதைச் சொல்லிதர கூடாது. தன் சொந்த கருத்துகளை குழந்தையின் மீது திணிக்க கூடாது. கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு பிடிக்காததை செய்வதோ செய்ய சொல்வதோ கூடாது. குழந்தை துரித உணவுகளை ஆசைப்பட்டு கேட்டால், உடனே வாங்கி தர கூடாது. இதையெல்லாம் ஏன் சாப்பிட கூடாது என முதலில் சொல்லி பழக்குங்கள்.

பள்ளிக்கு செல்ல அழும் குழந்தைகள்

பொய் சொல்லும் குழந்தைகள்

அதீத செயல்பாடுடன் உள்ள குழந்தைகள்

இவர்களைத் தாய் கவனிப்பதுடன் தந்தையும் சேர்ந்து கவனிப்பது நல்லது. இவர்களுக்கு மனம் மற்றும் உடல் ரீதியான சிகிச்சைகளைத் தர வேண்டும். கவுன்சலிங் செய்வதும் நல்ல பலன் கொடுக்கும்.

உங்கள் குழந்தையைத் திட்டுவதால் ஏற்படும் 7 தீமைகள்!

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிந்து கொண்டால், நீங்கள் மாறுவதோடு, நேர்மறை சக்திகளையும் எண்ணங்களையும் உங்கள் குடும்பத்தில் ஏற்படுத்த முனைந்து ,உங்கள் குழந்தைகளையும் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வளர்க்கும் சூழலை ஏற்படுத்துவீர்கள்.உங்கள் குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் 7 பாதிப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
1.மன உளைச்சல் / மன வருத்தம்

ஒருவர் நம்மை தொடச்சியாகத் திட்டுவதாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்போது நம் மனம் சுக்கல் சுக்கலாக உடைந்துவிடும்.இது எதார்த்தமான உண்மை தானே. உங்கள் குழந்தையை நீங்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கும்போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதிகம் வருத்தம் கொண்ட மனதோடு இருப்பதால் அவர்கள் எப்போதும் சோர்ந்தே காணப் படுவார்கள். இது அவர்களது வளர்ச்சியையும், வயதிற்கு ஏற்ற அறிவையும் பாதிக்கும்.மன உளைச்சலே பல கடுமையான நோய்களுக்கும் முதல் படி என்பதை தயவு செய்து நினைவு கூறுங்கள்.எதிர்காலத்தில் இது தற்கொலை எண்ணத்தைக் கூடத் தூண்டிவிடும்.

2. உற்சாகம் குறைவது

உங்கள் குழந்தையின் உற்சாகம் குறையத் தொடங்கும். நாம் செய்வது சரியா தவறா என்று புரியாமல் குழப்ப நிலைக்குத் தள்ளப்படுவர். நம் அப்பா அல்லது அம்மா எதற்காகத் திட்டுவார்கள் என்று கூட யூகிக்கத் தெரியாமல் தவிக்கத் தொடங்குவர். நாளடைவில் அவர்களுக்கு எதுவும் செய்ய உற்சாகம் இல்லாமல் போய் விடும்.படிப்படியாக மந்தநிலை அடைவர்.எந்த விசயத்திலும் நாட்டம் இருக்காது.சமவயதில் உள்ள மற்ற பிள்ளைகளுடன் பேச மாட்டார்கள்,கூடி விளையாட மாட்டார்கள்.சில நாட்களிலே தனி உலகத்தில் முடங்கி விடுவர்.இந்த நிலை நம் பிள்ளைகளுக்கு மறந்தும் வர நாம் அனுமதிக்கக் கூடாது.

3. பாதுகாப்பற்ற உணர்வு

ஒரு குழந்தை தனக்கு அம்மா அப்பா இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு தான் இந்த உலகத்தில் ஜனித்து வாழத் தொடங்குகிறது. அப்படி இருக்கும் போது, அவர்களே தங்களைத் தொடர்ந்து திட்டிக் கொண்டு இருந்தால்,எப்படி அவர்கள் உங்களிடமிருந்து ஒரு பாதுகாப்பான உணர்வைப் பெறுவார்கள்? குழந்தைகளுக்கு மனதளவில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது பெற்றோர்களின் முக்கிய பங்காகும்.

4. பொய் சொல்லத் தொடங்குவது

இது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம். தம் பெற்றோர்களிடமிருந்து திட்டு வாங்காமல் இருக்க, தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவற்றை மறைக்க அவர்களிடம் சிறு சிறு பொய்களைக் குழந்தைகள் சொல்லத் தொடங்கி விடுவார்கள். இதற்கு முழு காரணமும் எப்போதும் அச்சுறுத்தும் வகையில் பெற்றோர்கள் நடப்பதுவே ஆகும். உங்கள் குழந்தைகளுடன் நல்ல நண்பனாகத் தோழமையோடு இருக்கப் பழகுங்கள்.அப்போது மட்டுமே அவர்கள் எந்த பிரச்சனையையும் மனம் விட்டுப் பேசுவார்கள்.அவர்களுக்கு அந்த நம்பிக்கையை நாம் தருவது முக்கியம்.

5. பெற்றோர்கள் மீது பயம் ஏற்படுவது

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் எந்த இடத்திலும் பயம் இல்லாமல் இருப்பதுவே ஆரோக்கியமான சூழல்.ஆனால் இன்றைய கால கட்டத்தில் குழந்தை தன் சொந்த வீட்டிலேயே அச்சத்தோடுதான் வளருகின்றது.இது முற்றிலும் கசப்பான உண்மை.அதிக பயம் அவர்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்வதோடு அவர்களை வாழ்க்கையில் தவறான பாதையில் செல்லவும் தூண்டிவிடுகிறது.

6. படிப்பில் ஆர்வம் குறைவது

உங்கள் குழந்தையை நீங்கள் எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தால் அவர்கள் படிப்பு, கைத்திறன் அல்லது விளையாட்டு போன்ற விசயங்களில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தனக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய பெற்றோர்களே எப்போதும் திட்டிக் கொண்டு இருந்தால் எப்படி அந்தக் குழந்தை ஆர்வத்தோடு இருக்கும்? என்று நீங்கள் சற்று யோசிக்க வேண்டும்.

7. தன்னம்பிக்கை இழப்பது

நீங்கள் தொடர்ந்து உங்கள் குழந்தையைத் திட்டிக் கொண்டே இருந்தால் அவன் நிச்சயம் ஒரு நாள் தன்னம்பிக்கையை இழந்து விடுவான். மனதில் நீங்கள் ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையோடு வளரும் குழந்தைகள் மட்டுமே தங்கள் வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி அனைத்து விசயங்களிலும் வெற்றி பெற்று முன்னேறிச் செல்ல முடியும். இல்லை என்றால் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட ஒருவரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு அவன்/அவள் தள்ளப் பட நேரிடும். மேலே குறிப்பிட்டுள்ள விசயங்களை மனதில் கொண்டு உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நல்ல நண்பனாகவும் இருக்க வேண்டும்.அவர்களை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்காமல்,உங்கள் இல்லத்தில் அன்பைப் படரவிடுங்கள்.எதையும் குணமாகவும்,பக்குவமாகவும் எடுத்துக் கூறுங்கள்.குழந்தைகள் கண்ணாடி மாதிரி,கவனமாகக் கையாளுங்கள்.இறுதியாக நம் அன்பில் விழைந்தவர்களே பிள்ளைகள்,அவர்களையும் அன்பு வெள்ளத்தில் திளைக்கவிடுங்கள். இது அவனை/அவளை ஒரு நல்ல மனிதனாக வளர வழி செய்வதோடு,வெற்றியாளராகவும் மாற்ற உதவும்.

குழந்தைகள் தூய்மையான தூக்கம் பெற மசாஜ் செய்யுங்கள்!

குழந்தைக்கு மசாஜ் செய்வது புதிய தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிறகான மன அழுத்தத்திலிருந்து வெளியேற உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஏனெனில் இது குழந்தையுடன் ஒரு வலுவான பிணைப்பு, கண்ணுக்கு-கண் தொடர்பு ஆகியவற்றை உருவாக்குகிறது.
எடை அதிகரிப்பு:

குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். வயிற்று உட்பட உடலின் பிற முக்கிய உறுப்புகளுடன் மூளையை இணைக்கும் ஒரு முக்கிய நரம்பு – வேகஸ் நரம்பு தூண்டுகிறது என்பதால் இது எடை குறைந்த, முன்கூட்டிய குழந்தைகளுக்கு அதிசயங்களைச் செய்கிறது. இது புதிதாகப் பிறந்தவர்களில் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது, எடை அதிகரிக்க உதவுகிறது.

சிறந்த தூக்கம்:

ஒரு நல்ல மசாஜ் தொடர்ந்து ஒரு நல்ல சூடான மழை உங்கள் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைப் பெற வேண்டும். இது உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது மற்றும் முன்கூட்டிய குழந்தையின் இதயத் துடிப்பை சீரான வேகத்தில் வைத்திருக்க உதவுகிறது.

அமைதியான நிலை:

மசாஜ் செய்வது சற்று நிதானத்தை அளிக்கிறது மற்றும் குழந்தையை அமைதிப்படுத்தும். குழந்தைகளின் முழங்கால்களைப் பிடித்து, வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு தடவைகள் வயிற்றுக்குள் மெதுவாகத் தள்ளுவது குழந்தைக்கு அமைதியான நிலையை கொடுக்கும் பல தொந்தரவுக்கு இது சிறந்தது.

உடல், மன வளர்ச்சி:

குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் அல்லது பெரியவர்கள் தங்கள் சிறப்பு நேரத்தைப் பெறுகிறார்கள், மேலும் இது ஒரு அழகான பிணைப்பை உறுதிப்படுத்த வழிவகுக்கிறது. தொடர்புகள், கண்ணுக்குத் தொடர்பு, மசாஜ் செய்யும் போது முனுமுனுப்பது குழந்தையின் உடல் மற்றும் மூளை செயல்பாட்டின் வளர்ச்சியை வளர்க்க உதவுகிறது.

மசாஜ் செய்வது எப்படி ?

ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து உங்கள் குழந்தையை கால்களில் அல்லது மென்மையான பாயில் படுக்க வைக்கவும்.

மசாஜ் செய்ய எண்ணெய்கள் அல்லது குழந்தை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள்.

இந்தியாவில், எள் எண்ணெய் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கான முதல் தேர்வாகும், ஏனெனில் இது தசைகள் மற்றும் எலும்புகளுக்கு போதுமான பலத்தை அளிக்கிறது.

ஆலிவ் எண்ணெய் மற்றொரு சிறந்த தேர்வாகும். உங்கள் குழந்தைக்கு எது பொருத்தமானது என்பதை அறிய குழந்தை மருத்துவரிடம் பேசுங்கள்.

படுக்கைக்கு நேரத்திற்கு முன் பிசுபிசுப்பு அல்லாத மாய்ஸ்சுரைசரை கொண்டு மசாஜ் செய்வது உங்கள் குழந்தை நன்றாக தூங்க உதவும்.

புதிதாக குழந்தை பிறந்துள்ளதா? பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்!

குழந்தைகளுக்கு வரும் சின்னசின்ன பிரச்சனைகளுக்கும் ஒரு சில தீர்வுகள் என்பது இருக்க தான் செய்யும். அத்துடன் பெற்றோர்கள் ஒரு சில முதலுதவி முறைகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது என்பது மிகவும் முக்கியம். இந்தக் கட்டுரையில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு பயன் தரக்கூடிய சின்னச்சின்ன குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்து பயன்பெருங்கள்.
மலச்சிக்கல்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.

தேங்காய் பால்

வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.

வீடு சுத்தம் செய்தல்

சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் வீட்டை பெருக்குவதை தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.

சுத்தம்

வீட்டில் சின்னக்குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.

கால்சியம்

உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், ‘கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.

வசம்பு

‘குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.

பால்

பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.

புதினா இலைகள்

கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.

பேரீச்சை

குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.

மருத்துவம்

குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

நகம் வெட்டுதல்

குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.

காது வலி

குழந்தை அழும்போது காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக்கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம்.

தொண்டை புண்

வீட்டில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மலம் கழித்தல்

குழந்தை வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது. குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.

சளித் தொல்லை

சாதாரண சளித் தொல்லை ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும். குழந்தை அழும் போது அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும் எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வேர்க்குரு வராமல் தடுப்பது எப்படி? சிறந்த ஆலேசானைகள்

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான சரும சிக்கல்கள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான சிக்கல்கள் ஏற்படும். எனவே குழந்தைகளை இம்மாதிரியான சிக்கல்களில் இருந்து பாதுகாக்க குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். குறிப்பாக, குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பார்க்கலாம்.
1. பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர் திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.

2. தினமும் குழந்தையை ஒரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.

3. அதேபோல் குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.

4. குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

5. மேலும் குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், எனவே இதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.

5. குழந்தைக்கு வேர்க்குரு வந்துவிட்டால் உடனே வேர்க்குரு பவுடரை பயன்படுத்துவதற்கு பதில், சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.

6 குழந்தைகளுக்கு வேர்க்குருடன் சிவப்பு தடிப்புகள் ஏற்படும் அதற்கு சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.

7. குழந்தைக்கு வேர்க்குரு குறைய இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்யங்கள், பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள் இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.

8.குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.

9. சாதம் வடித்த கஞ்சி குழந்தையின் வேர்க்குரு பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும். இதனால் வேர்க்குரு விரைவில் சரியாகும்.