BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News

நாகா்கோவிலில் அரசுப் பேருந்து மோதி பெண் பலி

நாகா்கோவிலில் அரசுப் பேருந்து மோதியதில் கணவா் கண் முன்பே மனைவி உயிரிழந்தாா்.
நாகா்கோவிலை அடுத்த கிருஷ்ணன்கோவில் அருகுவிளையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(43). திருச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியா். இவரது மனைவி வளா்மதி. இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். 

இத்தம்பதி செவ்வாய்க்கிழமை இரவு நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்பிலிருந்து ஆட்சியா் அலுவலக சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியதாம். இதில், இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனா். அதில், வளா்மதி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி காயமடைந்தாா். செந்தில்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

வளா்மதி மீட்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். 

இதுதொடா்பாக, பேருந்து ஓட்டுநரான ஈசாந்திமங்கலம் வரகுணமங்கலத்தைச் சோ்ந்த கண்ணன் மீது நாகா்கோவில் போக்குவரத்து விசாரணைப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

மத்திய அரசுடனான விவசாய சங்கங்களின் பேச்சுவார்த்தை தோல்வி: டிசம்பர் 3-ம் தேதி மீண்டும் சந்திப்பு

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை, மீண்டும் டிசம்பர் 3 இல் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் "கூட்டம் நன்றாக இருந்தது, மீண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். 

விவசாயிகள் சார்பாக பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் விவசாயிகள் தலைவர்கள் பேச்சுவார்த்தை அனைவருடனும் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினர், எங்களுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறினார்

மூடப்படும் முத்தூட் பைனான்ஸ்.. நிலைகுலைந்த தொழிலாளர்கள்

இந்திய தொழிற்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக கேரளாவின் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனுடைய 611 கிளைகளில் 300 கிளைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த அலெக்சாண்டர், எங்கள் சொந்த மாநிலத்தில் அலுவலகங்களைத் திறக்க எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆரப்பாட்டம் காரணமாக எங்களால் செயல்பட முடியாத கிளைகளை மூட முடிவு செய்துள்ளோம். 

இது ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தப்படும். இரண்டரை ஆண்டுகளில், நாங்கள் எட்டு முறை போராட்டத்தை எதிர்கொண்டோம். இப்படியிருந்தால் நாங்கள் இதை கேரளாவில் நடத்த முடியாது. தயவுசெய்து எங்களை வேறொரு இடத்தில் நடத்த அனுமதிக்கவும் என்றார். 

ஏற்கனவே லட்சக் கணக்கில் வேலை இல்லை. தற்பொழுது வங்கி பிரச்சனைகளும் சேர்ந்தால் இந்தியா வல்லரசு ஆக முடியாது டல்லரசு தான் ஆக முடியும்.

இரவு முழுக்க சண்டை.. மருமகளை கொலை செய்துவிட்டு மகன், மாமியார் செய்த செயல்

கேரளாவை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஜீவா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் இவர்கள் கேரளாவின் தேக்கடி பகுதியில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பிரமோத், ஜீவா மற்றும் பிரமோத் தாயாரான ஷோபனா ஆகிய மூவரும் கேரளாவில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். 

இந்நிலையில் ஷோபனா பிரமோத் மற்றும் ஜீவா ஆகியோருக்கு நிலம் வாங்கும் விஷயம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் செய்துள்ளனர். சம்பவ நடந்த அன்று, அறையில் இருந்து யாரும் வெளிவராத நிலையில் அங்கு வேலை செய்யும் லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்த இன்னொரு சாவியைக் கொண்டு கதவை திறந்து பார்த்துள்ளனர். 

கதவை திறந்து பார்த்த ஊழியர்கள் ஜீவா கட்டிலில் சடலமாக கிடப்பதையும், பிரமோத் மற்றும் ஷோபனா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் விசாரிக்கையில் பிரமோத் மற்றும் அவரது தாயார் சோபனா ஜீவாவை கொலை செய்துவிட்டு அந்த பயத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.

கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை

கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியராக 2013 முதல் பணியாற்றியவர் கர்ண மகாராஜன். 

கேரள மாணவிக்கு பிஎச்டி வழிகாட்டியாக இருந்தார். அப்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவர் மீது மாணவி புகார் அளித்தார். இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் விஷம் அருந்திய அந்த மாணவி மதுரை காமராஜர் பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இதுதொடர்பாக சத்தியம் தொலைக்காட்சியில் உடனடியாக செய்திகள் வெளியிடப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்களை விசாரிக்கும் பல்கலைக்கழக கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மாணவி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. 

இந்நிலையில் பிப்ரவரி 5 அன்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது , இந்நிலையில் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் அவசர சிண்டிகேட் கூட்டம் நேற்று நடந்தது இதனையடுத்து மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு உத்தரவு வழங்கப்பட்டது.

தினமும் ஆன்லைனில் ஆடர் செஞ்சு சாப்பிடும் நாய்..

கேரள மாநிலத்தில் தினமும் ஆன்லைன் ஆடர் உணவுகளை மட்டுமே சாப்பிடும் நாய். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வேலையில்லா இளைஞர்கள்.
கேரள மாநிலத்தை சேர்ந்த வர்கீஸ் என்பவர், தனது தெருவில் வாழும் ஒரு நாய்க்கு தினமும் ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு வாங்கித் தரும் செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கவுதியர் நகரில் வசித்து வருபவர் வர்கீஸ். 

சுற்றுலா ஏற்பாடு மேனேஜர் வேலை செய்யும் இவர் ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய் ஒன்றை தனது வீட்டிற்கு அழைத்து வந்து இதற்கு ஷேடோ என பெயர் வைத்து தினமும் உணவளித்து பாதுகாப்பாக வளர்த்து வருகிறார் இவர். 

சுற்றுலா வேலை செய்து வருவதாக அடிக்கடி வெளியே செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாய்க்கு உணவளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் உணவு ஆடர் செய்து அந்த நாய்க்கு கொடுத்து வருகிறார் இவர். 

இது குறித்து அவரிடம் கேட்டபோது, நான் அடிக்கடி வெளியே செல்வதால் அதை சரியாகக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் அதன் பெயரிலேயே ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து, உணவு ஆர்டர் செய்து விடுவேன். உணவு வந்தவுடன் அதனை செக்யூரிட்டி பிரித்து நாய்க்கு கொடுத்துவிடுவார்”என்று கூறினார்.